உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் அருகே எரியாத ஹைமாஸ் விளக்கு அச்சத்தில் பக்தர்கள்

கோயில் அருகே எரியாத ஹைமாஸ் விளக்கு அச்சத்தில் பக்தர்கள்

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக்கோயில் முன்புள்ள தெப்பக்குளம் அருகே உள்ள ஹைமாஸ் விளக்கு மூன்று மாதங்களாக எரியவில்லை.அப்பகுதி மக்கள் கூறுகையில், வெள்ளி, செவ்வாய் நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாகம்பரியாள் கோயிலுக்கு வருவார்கள். இரவில் மண்டபங்களில் தங்கியிருப்பார்கள். மூன்று மாதங்களாக ஹைமாஸ் விளக்கு எரியாததால் இரவு நேரத்தில் வெளியில் செல்ல பக்தர்கள் அச்சபடுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் ஹைமாஸ் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ