உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மக்கள் தொகை அதிகமாக உள்ள குரூப்பை 2 ஆக பிரிக்க வலியுறுத்தல்

மக்கள் தொகை அதிகமாக உள்ள குரூப்பை 2 ஆக பிரிக்க வலியுறுத்தல்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மக்கள் அதிகமாக உள்ள குரூப்களை இரண்டாக பிரித்து புதிய வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.திருவாடானை தாலுகாவில் நான்கு பிர்கா, 61 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த தாலுகாவில் அஞ்சுகோட்டை, டி.நாகனி, தோட்டாமங்கலம் போன்ற 10க்கும் மேற்பட்ட பெரிய கிராமங்கள் உள்ளன.மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் ஒரு வி.ஏ.ஓ., சமாளிக்க சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.இதுபோன்ற பெரிய கிராமங்களை இரண்டாக பிரித்து வி.ஏ.ஓ., பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வி.ஏ.ஒ.,க்கள் சங்க தலைவர் நம்புராஜேஸ் கூறியதாவது:பேச்சில்லா கிராமங்கள் முன்பு இருந்தன. இப்போது அக்கிராமங்களை அருகில் பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்கள் நிர்வகிக்கின்றனர். மக்கள் தொகை பெருகி விட்டதால் பல கிராமங்கள் பெரிதாக உள்ளன. திருவாடானை தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட பெரிய கிராமங்கள் உள்ளன.இதனால் வி..ஏ.ஓ.க்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெரிய தாலுகாக்களை இரண்டாக பிரிப்பது போல், பெரிய கிராமங்களை இரண்டாக பிரித்து அந்த குரூப்களுக்கு புதிய வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ