ராமேஸ்வரத்தில் ராட்சத அலைகள்
ராமேஸ்வரம்:நேற்று ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதனால் பஸ்ஸ்டாண்ட் அருகில் தேசிய நெடுஞ்சாலை, கோயில் நான்கு ரதவீதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.ராமேஸ்வரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து ஆக்ரோஷமாக கரையில் மோதின. பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சி பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.