பருவ மழைக்கு நெடுஞ்சாலைத்துறை தயார்
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பருவ மழையை சமாளிக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பாலங்களுக்கு அடியில் புதர் அகற்றப்பட்டன.நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டால் அடைக்கும் வகையில் மணல் மூடைகள், மணல் அள்ளும் இயந்திரம், மரங்கள் சாய்ந்தால் அவற்றை அகற்றும் வகையில் கிளைகளை வெட்டும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.