உள்ளூர் செய்திகள்

மல்லிகை கிலோ ரூ.2000

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், மண்டபத்தில் மழையால் மல்லிகைப் பூ உற்பத்தி குறைந்துள்ளதால் கிலோ ரூ.2000த்திற்கும் மேல் விலை உயர்ந்துள்ளது.தங்கச்சிமடம், மண்டபம் சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை நாற்று உற்பத்தி நடக்கிறது. வெளி மாவட்ட, மாநிலங்களுக்கும் இங்கிருந்து விற்பனை செய்யப்படுகிறது.பங்குனி, சித்திரை சீசன் காலக்கட்டத்தில் மல்லிகை கிலோ ரூ.300க்கு விற்கிறது. சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ.1500 முதல் ரூ.2000த்திற்கும் மேல் விற்கப்படுகிறது. தற்போது மழையால் மண்டபம், தங்கச்சிமடம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் மல்லிகை கிலோ ரூ.2000 வரை விற்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்ட மலர் வர்த்தக சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், மழையால் உள்ளூர், வெளியூர்களில் இருந்து மலர்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் நேற்று மல்லிகை கிலோ ரூ.2000, முல்லை ரூ.800, கனகாம்பரம் ரூ.1200, பிச்சிப்பூ ரூ.600 என வழக்கத்தை விட இரண்டு, மூன்று மடங்கு விலை அதிகரித்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை