உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே புளியங்குடி கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கூத்தப்பெருமாள் அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது. விழாவிற்காக ஒரு மாதத்திற்கு முன்பு புளியங்குடியில் பிடிமண் வழங்கப்பட்டது. கிராம மக்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.இந்நிலையில் புளியங்குடியில் தயார் செய்து வைக்கப்பட்ட குதிரைகள், கருப்பண்ணசாமி, பேச்சியம்மன், பைரவர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தவழும் பிள்ளைகளை கிராம மக்கள் முக்கிய விதிகளில் ஊர்வலமாக துாக்கி வந்தனர்.கடந்த ஆண்டு விளைந்த தானியங்கள் வைத்து கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் கூத்தபெருமாள் அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ