கும்பாபிஷேகம்
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே வடக்கு மேதலோடையில் உள்ள பதினாறு பிள்ளை காளியம்மன் கோயிலில் புதிய திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. அனுக்ஞை, வாஸ்து பூஜை, யாகசாலைபிரவேசம், கோ பூஜை, தன பூஜை, பூர்ணஹுதி உள்ளிட்டவைகள் நடந்தது. பதினாறு பிள்ளை காளியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சந்திரசேகர சாஸ்திரிகள் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு 16 வகை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வடக்கு மேதலோடை கிராம மகளிர் மன்றம், இளைஞரணி மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்கள் செய்திருந்தனர்.