உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மனைவியுடன் வாழவிடாமல் தடுத்த மாமியார் கம்பியால் தாக்கி கொலை

மனைவியுடன் வாழவிடாமல் தடுத்த மாமியார் கம்பியால் தாக்கி கொலை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே மனைவியுடன் வாழ விடாமல் தடுத்த மாமியாரை, இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.ஆர்.காவனுார் நடுத்தெரு முருகேசன், 53. இவரது மனைவி கனகு, 48. இவர்களின் முதல் மகள் சிவபார்வதியை, அப்பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் மதன்குமார், 35, என்பவருக்கு, ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர்.மதன்குமார் -- சிவபார்வதி தம்பதிக்கு, இரு மகன்கள் உள்ளனர். சிவபார்வதியின் தங்கை சத்தியபார்வதி சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டுச் சென்று மீண்டும் திரும்பினார். இதையறிந்த மதன்குமார், சத்தியபார்வதியை கண்டித்து, மாமனார், மாமியாருடன் தகராறு செய்தார். பெற்றோருடன் மதன்குமார் தகராறு செய்ததால், சிவபார்வதி கோபித்துக்கொண்டு, தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.குடும்பம் நடத்த வருமாறு மனைவியை பலமுறை அழைத்த மதன்குமாரை, கனகு கண்டித்து திருப்பி அனுப்பினார். இதனால் கோபத்தில் இருந்த மதன்குமார், இரு நாட்களுக்கு முன் கனகுவை, இரும்புக் கம்பியால் தாக்கினார்.காயமடைந்த கனகுவை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கனகு நேற்று இறந்தார். முருகேசன் அளித்த புகாரின்படி, பஜார் போலீசார் விசாரித்து மதன்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !