உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரு குழந்தைகளுடன் தாய் மாயம்

இரு குழந்தைகளுடன் தாய் மாயம்

ராமநாதபுரம்; ராமநாதபுரம் நேரு நகர் 5வது தெருவில் தாய் மகன், மகளுடன் மாயமானார். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.ராமநாதபுரம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 35, இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுபநந்தினி 30, இவரது குழந்தைகள் சுதீப் 8, சனாஸ்ரீ 2, மணிகண்டன் கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகை தந்துள்ளார். இந் நிலையில் மணிகண்டன் மனைவி சுபநந்தினி, மகன் சுதீப், மகள் சனா ஸ்ரீ ஆகியோருடன் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் காணாமல் போனார். இது குறித்து சுபநந்தினியின் தாய் சீதா புகாரில் கேணிக்கரை போலீசில் மூவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !