உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயிலில் முளைப்பாரி விழா

கோயிலில் முளைப்பாரி விழா

முதுகுளத்துார்: முதுகுளத்துார் காந்தி நகர் கிராமத்தில் தங்க முத்து மாரியம்மன் கோயில் 3ம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது. ஒரு வாரத்திற்கு முன் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். 108 விளக்கு பூஜை நடந்தது. வழிவிடு முருகன் கோயிலில் இருந்து பஜார் உட்பட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் பால்குடம், அக்கினி சட்டி, வேல்குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். தங்க முத்து மாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து சக்திகரகம், முளைப்பாரி துாக்கி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி