ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்; 999 வழக்குகளில் ரூ.7.80 கோடிக்கு தீர்வு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 999 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.7.80 கோடி வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான் தலைமை வகித்தார். விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி கவிதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகன்ராம், சார்பு நீதிபதி அகிலாதேவி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பிரசாத், மாஜிஸ்திரேட்டுகள் நிலவேஸ்வரன், பிரபாகரன், கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின்வெஸ்டா, வழக்கறிஞர் சங்கத்தலைவர் ேஷக் இப்ராஹிம் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்காளர்கள் பங்கேற்றனர்.பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி, கடலாடி, திருவாடானை, ராமேஸ்வரம் நீதிமன்றங்களில் 10 அமர்வுகள் நடத்தப்பட்டது.இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை, வங்கி வராக்கடன் உட்பட 3468 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்கொள்ளப்பட்டன. இதில் 999 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வழக்காளர்களுக்கு 7 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 350 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது.