ராமேஸ்வரம் கோயிலில் புது பள்ளியறை பூஜை நடந்தது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் முடிந்த பின் நேற்று புது பள்ளியறை பூஜை நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஜூலை 30ல் ஆடித் திருக்கல்யாணம் விழா விமரிசையாக நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 8:10 மணிக்கு கோயிலில் இருந்து பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி அம்மன் சன்னதியில் அலங்கரிக்கப்பட்ட பள்ளியறையில் மலர்கள் அலங்கரிக்கப்பட்ட புது பள்ளி அருகில் எழுந்தருளினார்.அங்கு சுவாமி, அம்மனுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர்.