உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண் ரோடாக மாறிய தார் ரோட்டில் மக்கள் அவதி

மண் ரோடாக மாறிய தார் ரோட்டில் மக்கள் அவதி

சிக்கல்: சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சியில் காமராஜபுரம் கிராமத்திற்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்து மண் ரோடாக மாறி உள்ளது.கடந்த 2005ல் அமைக்கப்பட்ட தார் ரோட்டில் அதன் பிறகு எவ்வித பராமரிப்பும் இல்லாததால் முழுவதும் மண்மேவி குண்டும் குழியுமாக மாறி உள்ளது. ரோட்டின் இரு புறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர்.காமராஜர்புரம் பா.ஜ., நிர்வாகி நாகராஜன் கூறுகையில், காமராஜபுரத்தில் இருந்து சிறைக்குளம் வரை 2 கி.மீ., சேதமடைந்த ரோடு முழுவதும் வயல்வெளி மண்ணால் சூழப்பட்டுள்ளதால் ரோடு இருந்ததற்கான அடையாளம் இன்றி காணப்படுகிறது.எனவே கடலாடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் இந்த ரோட்டை ஆய்வு செய்து மீண்டும் சீரமைத்து புதிய தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை