உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராதானுாரில்  சுகாதாரநிலையம்  அமைக்க மக்கள் வலியுறுத்தல்

ராதானுாரில்  சுகாதாரநிலையம்  அமைக்க மக்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மேடாகோட்டை அருகே ராதானுார் கிராமத்தில் அரசு துணை சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.ராதானுார் ஊராட்சியில் 5000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு ஏற்கனவே இருந்த சுகாதாரநிலையம் சேதமடைந்ததால் அதை அகற்றி விட்டனர். அதன் பிறகு 7 ஆண்டுகளாகியும் மீண்டும் அரசு துணை சுகாதாரநிலையம் அமைக்கவில்லை. இதனால் 6 கி.மீ.,ல் உள்ள ஆனந்துார் அரசு மருத்துவமனைக்கு சென்று வர மக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே ராதானுாரில் துணை சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ