உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மார்ச் 3ல் பிளஸ் 2 தேர்வு துவங்கும் 64 மையத்தில் முன்னேற்பாடு

மார்ச் 3ல் பிளஸ் 2 தேர்வு துவங்கும் 64 மையத்தில் முன்னேற்பாடு

ராமநாதபுரம்: மார்ச் 3 ல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 14,606 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 64 மையங்களில் முன்னேற்பாடுகள் நடக்கிறது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3 ல் துவங்கி 25 வரை நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி -70, உதவி பெறும் பள்ளிகள் -37, தனியார் பள்ளிகள் -52, மாதிரி பள்ளி-1 என 160 மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் 117 பேருடன் 7731 மாணவிகள் உட்பட 14,606 பேர் பிளஸ் 2 ல் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கான வினாத்தாள்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, கமுதி ஆகிய இடங்களில் ஜன்னல் இல்லாத, ஒருவழிப் பாதை மட்டும் உள்ள அறையில் வைக்கப்பட உள்ளன. மேலும் 64 முதன்மை கண்காணிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் நிலைத்த படை அமைக்கப்படுகிறது. இதுபோக வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் காப்பாளர், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பொதுத்தேர்வு நடைபெறும் 64 மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் அந்தந்த பள்ளி தலைமை யாசிரியர்கள் மூலம் செய்யப்படுகிறது. வினாத்தாள் வைக்கும் இடங்களில் 24 மணி நேரம் சுழற்சி முறையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது. வினாத்தாள் படிக்க முதல் 10 நிமிடங்கள் வழங்கப்படும்.மாற்றுத்திறனாளியான மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும். இதே போல் பிளஸ் 1 ல் தேர்வு மார்ச் 5 முதல் 27 வரை நடக்கிறது. இத்தேர்வை 64 மையங்களில் 161 பள்ளிகளை சேர்ந்த 7515 மாணவிகள் உட்பட 14,594 பேர் எழுத உள்ளனர் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை