தபால் அனுப்பி போராட்டம்
ராமநாதபுரம்: இ--பைலிங் முறையை கைவிடக் கோரி ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தபால் அனுப்பி போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் அன்புச்செழியன் கூறியதாவது: தமிழகத்திலும், கேரளாவிலும் இ--பைலிங் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கேரளாவில் இ--பைலிங் முறையை நடைமுறைப்படுத்த நல்ல கட்டமைப்பு வசதி உள்ளது. ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற எவ்வித அடிப்படை வசதிகளையும் ஏற்படத்தவில்லை. இதனால் வழக்கறிஞர்களை விட மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை எதிர்த்து ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் தனித்தனியாக தபால் அனுப்புகிறோம் என்றார்.