உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  செப்.19ல் தனியார் துறை வேலை  வாய்ப்பு முகாம்

 செப்.19ல் தனியார் துறை வேலை  வாய்ப்பு முகாம்

ராமநாதபுரம் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்.,19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலை நாடும் இளைஞர்கள் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடக்கிறது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையானவர்களை தேர்வு செய்யலாம். பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச் சான்றுகள், ஆதார், ரேஷன் கார்டுகள், பாஸ்போர்ட் போட்டோக்களுடன் செப்.,19 காலை 10:00 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பங்கேற்கலாம். இம்முகாமில் வேலை பெறுவதால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து ஆகாது. தனியார் துறை நிறுவனங்கள், வேலைதேடும் நபர்கள் கட்டணம் ஏதுமின்றி www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக் குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை