மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் புது பள்ளியறை பூஜை நடந்தது
29-Aug-2025
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு நவராத்திரி விழா காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (செப்., 22) முதல் நவராத்திரி விழா துவங்குகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று இரவு பர்வதவர்த்தினி அம்மனுக்கு கோயில் குருக்கள் நவராத்திரி விழாவிற்கு காப்பு கட்டி தீபாராதனை நடந்தது. இன்று லட்சுமண தீர்த்தம் அருகில் உள்ள வர்த்தினி மஹாலில் பர்வதவர்த்தினி அம்மன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 2ம் நாள் திருவிழாவான செப்.,23ல் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி அருகில் அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும், செப்., 24ல் மகாலட்சுமி, செப்., 25ல் சிவதுர்கை, செப்., 26ல் சரஸ்வதி, செப்., 27ல் கவுரி சிவபூஜை, செப்., 28ல் சாரதாம்பிகை, செப்., 29ல் கஜலட்சுமி, செப்., 30ல் மகிஷாசூரமர்த்தினி, அக்.,1ல் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய அலங்காரத்தில் அருளாசி வழங்குவார். அக்.,2ல் விஜயதசமியையொட்டி வன்னி நோன்பு தரவையில் பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளி அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
29-Aug-2025