| ADDED : ஆக 23, 2026 12:08 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமாரை கண்டித்து அரண்மனை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் தாலுகா கமிட்டி உறுப்பினர் பூமிநாதன் தலைமை வகித்தார். இதில், தலைமைச் செயலாளர் சாய்குமார் இடதுசாரி மாணவர்களுடைய செயல்பாடு குறித்த விவரங்களை சேகரிக்க கல்லுாரி கல்வி இயக்ககத்திற்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதை கண்டித்தனர். மேலும் திண்டுக்கல் மாவட்டம் குஜிசிலியம்பாறை தாசில்தார் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளையும், தலைவர்களையும், உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டதை கண்டித்தும் கோஷமிட்டனர். மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.