மேலும் செய்திகள்
டிராக்டர் பறிமுதல்
24-Mar-2025
திருவாடானை: திருவாடானை தாலுகா மங்களக்குடியில் ஏப்.12ல் பொது வினியோக திட்டத்தில் உள்ள குறைகளை சொல்ல மக்கள் மனுக்கள் கொடுக்கலாம்.பொது வினியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மாதத்தின் இரண்டாவது சனி அன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும்.இது குறித்து திருவாடானை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர்கள் கூறியதாவது: திருவாடானை தாலுகா மங் களக்குடி குரூப் மங் களக்குடியில் சிறப்பு குறைதீர் முகாம் ஏப்.12ல் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும். பொது விநியோகத்தில் ஏற்படும் குறைகளை குறிப்பிட்டு மனுக்களாக கொடுக்கலாம். பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம், செய்வது, அலைபேசி எண் மாற்றுதல், குடும்ப தலைவர் போட்டோ மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம் என்றனர்.
24-Mar-2025