உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம் படகு டிரைவருக்கு ரூ. 2 கோடி

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம் படகு டிரைவருக்கு ரூ. 2 கோடி

ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு ரூ.7 லட்சம் அபராதம், படகின் டிரைவருக்கு மட்டும் ரூ. 2 கோடியும் அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.ராமேஸ்வரத்தில் இருந்து ஜன.,25ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் சச்சின் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து படகில் இருந்த 15 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.இதில் 14 மீனவர்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் வீதம் ரூ. 7 லட்சம் அபராதமும் (இந்திய மதிப்பில் ரூ.2.03 லட்சம்), இதனை கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.மேலும் இந்தப்படகின் டிரைவர் ஜெயபால் 56, என்பவருக்கு ரூ. 2 கோடி அபராதம் (இந்திய மதிப்பில் ரூ.58 லட்சம்), இதனை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை செலுத்த முடியாத நிலை உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் அபராதத்தை செலுத்தி மீனவர்களை விடுவிக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி