உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எட்டு நாட்களுக்கு பின் மீன்வரத்து ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

எட்டு நாட்களுக்கு பின் மீன்வரத்து ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்:புயல் எச்சரிக்கையால் 8 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் அதிகளவில் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.பெஞ்சல் புயல் எச்சரிக்கையால் நவ.24 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்ததால் வீடுகளில் முடங்கினர். நவ.30ல் புயல் கரையை கடந்த நிலையில் 8 நாட்களுக்குப் பின் டிச.2ல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.இந்திய- இலங்கை எல்லையில் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினார்கள்.இதில் பெரும்பாலான படகில் காரல் மீன், வெளமீன், இறால் மீன், கணவாய் உள்ளிட்ட உயர்ரக மீன்கள் அதிகமாக சிக்கியது. 8 நாட்களுக்கு பின் இலங்கை கடற்படை கெடுபிடி இன்றி வலையில் அதிக மீன்கள் சிக்கி, போதுமான வருவாய் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ