உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை படையினரால் விரட்டியடிப்பு; ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நஷ்டம்

இலங்கை படையினரால் விரட்டியடிப்பு; ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நஷ்டம்

ராமேஸ்வரம்; நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியதால், மீனவர்கள் நஷ்டத்துடன் கரை திரும்பினார்கள். ஆக., 2ல் ராமேஸ்வரத்தில் இருந்து 260 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். இதனால்அச்சமடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்து கொண்டு படகுடன் திரும்பினர். பின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்தனர். இதில் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்வரத்து சிக்கவில்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட படகில் தொழில் நஷ்டம் ஏற்பட்டு நேற்று காலை ராமேஸ்வரம் கரைக்கு திரும்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி