உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரிபெல் சேதுபதி பெயர் வைக்க வலியுறுத்தல்

ரிபெல் சேதுபதி பெயர் வைக்க வலியுறுத்தல்

கீழக்கரை : ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டிற்கு மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கீழக்கரையை சேர்ந்த பிரபாகரன் கூறியதாவது: ராமநாதபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரைவில் திறக்கப்பட உள்ளது. அதற்கு ராமநாதபுரம் மன்னரும், சுதந்திர போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பெயரை வைக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ