உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் நியமனத்தால் நிம்மதி

ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் நியமனத்தால் நிம்மதி

திருவாடானை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் நியமிக்கப்பட்டதால் நோயாளிகள் நிம்மதியடைந்தனர். ஸ்கேன் வசதி வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.தொண்டி, எஸ்.பி.பட்டினம், வெள்ளையபுரம், மங்களக்குடி, திருவெற்றியூர், பாண்டுகுடி உள்ளிட்ட ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது. போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொண்டியில் நான்கு டாக்டர்களும், மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா இரண்டு டாக்டர்களும் நியமிக்கப்பட்டனர்.இது குறித்து மக்கள் கூறுகையில், டாக்டர்கள் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு செல்கின்றனர். ஸ்கேன் வசதியில்லாததால் நகரங்களில் உள்ள மருத்துவமனைக்கு செல்கின்றனர்.தொண்டியில் ஸ்கேன் இருந்தும் செயல்படாமல் உள்ளது. ஆகவே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஸ்கேன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை