மேலும் செய்திகள்
போதையில் தகராறு : போலீசார் விசாரணை
04-Jul-2025
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் இரவு காவலர் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் பிரதோஷம், வைகாசி விசாகம் மற்றும் ஆடிப்பூரத்திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இரவு காவலர் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:கோயிலில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டுள்ளது. இருந்த போதும் இரவு காவலர் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் நள்ளிரவில் நுழைந்த திருடர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிலைகளை திருடிச்சென்றனர். போலீசார் சிலைகளை மீட்டனர்.எனவே சிலை திருட்டை தடுக்க பாதுகாப்பு அவசியம் என்பதால் இரவு காவலர் நியமிக்க வேண்டும். நேற்று முன்தினம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரிடம் இரவு காவலர் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.
04-Jul-2025