உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

திருவாடானை:தொண்டி அருகே கடலில் விசைப் படகு கவிழ்ந்தது. கடலில் தந்தளித்த 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சோலியக்குடியை சேர்ந்தவர் காளி 50. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன், மதியழகன், கந்தன், ராபின்சன், நவனேஷ் ஆகிய ஐந்து மீனவர்கள் நேற்று அதிகாலையில் மீன்பிடிக்க சென்றனர்.நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில் ஓட்டை விழுந்ததால் கடல் நீர் படகிற்குள் புகுந்தது. இதில் படகுடன் மீனவர்கள் கடலில் விழுந்தனர். தத்தளித்து கொண்டிருந்த அவர்கள் மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.சோலியக்குடியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மரைன் போலீசார் ஐந்து படகுகளில் சென்று அம்மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மூழ்கிய படகை மீட்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி