உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் * பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் * பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ராமநாதபுரம்:''மற்ற மாநிலங்களை போல ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலப்பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறினார்.ராமநாதபுரத்தில் நடந்த கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மாநிலப் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது:சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 9 அறிவிப்புகள் அறித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரம் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை செப்.,ல் குழு அறிக்கையை பெற்ற உடன் எந்த மாற்றமும் இன்றி அமல்படுத்த வேண்டும்.மற்ற மாநிலங்களில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வழங்கப்படுவதில்லை. எனவே தமிழக அரசும் அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் ரூ.25 லட்சம் பணிக்கொடையை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். 2004-2006 பட்டதாரி ஆசிரியர்கள் தொகுதிப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது. அதனை விரைந்து முடித்து ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். எங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை இதுவரை மூன்று முறை சந்தித்துள்ளோம்.ஜாக்டோ- ஜியோ போராட்டம் காரணமாக செப்., மாதம் பழைய ஒய்வூதியத்திட்டத்தை அரசு அமல்படுத்தும் என நம்புகிறோம். தவறினால் ஜாக்டோ- ஜியோ அமைப்புடன் இணைந்து அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்துவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Samy Durai
மே 03, 2025 08:32

2004 இல் பணியில் சேர்ந்தார்களாம் 2006 இல் பணி வரன்முறைப்படுத்தினார்களாம் இடைப்பட்ட காலத்தை பணிவரமுறை படுத்த வேண்டுமா உங்களுக்கு கொடுப் பதுஅதிகப்படியான சம்பளம் அவனவன் பதவி உயர்வு கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றான் உங்களுக்கு இடைப்பட்ட காலத்தை பணிவுகாரமுறை செய்ய வேண்டுமா அதுவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது இதனை குறைப்பதற்கு என்ன வழி இருக்கின்றதோ அரசு ஆய்வு பண்ணிக் கொண்டிருக்கிறது மறந்துவிடாதீர்கள் பட்டதாரி ஆசிரியர்களே ஆசிரியர்களில் பாதிக்கப்படுவது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் இடைநிலை ஆசிரியர்களும் அதற்கு உதவுங்கள் நீங்கள்


RajendraK
மே 02, 2025 20:01

அரசு ஊழியர்கள் அனைவரையும் கார்பரேட் கம்பெனிகள் மற்றும் அமெரிக்கா போல் காண்ட்ராக்ட் முறையில் பணியமர்த்தி வேலைக்கு வந்தால் மட்டுமே ஊதியம். சலுகைகள் டி ஏ, பி ஏ எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்கு நல்ல திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அரசு பணி மக்களுக்கான சேவை பணி. தனியார் தொழிற்சாலைகள் மொத்த பொருளாதார உற்பத்திக்கு உதவுகிறது. ஆனால் தனியார் சம்பளம் குறைவு. எனவே அரசு பணிகளுக்கு தனியார் ஊதியத்தில் பாதி கொடுத்தால் போதும். நாடு முன்னேறும்.


Samy Durai
மே 03, 2025 08:33

உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா


G. Lakshmi Narayanan
மே 02, 2025 19:30

எல்லாத்தையும் தனியார் மயமாக்கி விட்டு, அதை கண்காணிக்க வேண்டும். இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகிறதை நன்கு மிகப்பெரிய அளவில் நிறுத்தலாம். அரசு அலுவலர்களுக்கு மட்டும் தேவையற்ற சலுகைகள், பயன்கள் கொடுக்கப் படுகிறது. மாநிலத்திலும் சரி, மத்தியிலும் சரி இதே போக்கு தான். பைனான்ஸ் மினிஸ்ட்ரி, ரிசர்வ் வங்கி, நீதிபதிகள் இவர்கள் எல்லாம் மற்ற மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். யார் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் மேதாவிகள் ஆகிவிடுகிறார்கள். மற்றபடி அவர்கள் எல்லாம் சாதாஆவிகள் ஆகிவிடுவார்கள். இக்காலத்தில். மக்களும் சரியில்லை ஆளுபவர்களும் சரியில்லை. சட்டமும் சரியில்லை. எல்லாம் எங்கும் சுயநலம். என்ன சொல்லி என்ன பண்றது. எல்லாம் விதி. எப்பொழுது முதல் யுகம் திரேதாயுகம் தாண்டியதோ, அப்பொழுதிலிருந்து விதி ஆரம்பித்து விட்டது.


reghupathy umashankar
மே 02, 2025 18:51

The concessions recently annoinced by the C.M. in the Assembly are nothing but an eyewash. 2 % Addl.DA is due and already announced by the Central Govt. Enhancement of the quantam of Loans and Advances to State Govt. Employees are routine one and already overdue,which are repayable in instalments with interest wherever applicable. Enhancement of Maternity leave to female employees from 240 days to one year is the only announcement worth to be appreciated.


Venkatesan Srinivasan
மே 02, 2025 16:02

தண்ட கருமாந்திரங்கள். தனியார் பள்ளிகளில் இந்த தண்டங்களுக்கு அழுவதில் பாதி கூட சம்பளமாக கொடுக்கப் படுவதில்லை. ஆனால் தேர்ச்சி விகிதம் 90% மேல் இந்த தண்டங்களுக்கு எத்தனை அழுதாலும் தேர்ச்சி மிகவும் குறைவு. ஒருவகையில் டாஸ்மாக் ஊழியர்களைக் காட்டிலும் மிகவும் திறமை குறைவு. இந்த தண்டங்களை வைத்து பள்ளிக்கூடம் நடத்துவதற்கு பதில் வேறு வேலை செய்யலாம். கூட்டமைப்பு தமிழகத்திற்கு மற்றும் ஒரு சாபம். பணியே தண்டம் அதற்கு பணிக்கொடை வேறா?


reghupathy umashankar
மே 02, 2025 18:56

All the schemes of the Government are implemented by the Govt. Employees with adedication.


புதிய வீடியோ