மேலும் செய்திகள்
காட்டு வேளாங்கண்ணியில் அடிப்படை வசதியின்றி அவதி
28-Feb-2025
ராமநாதபுரம்: திருவாடானை தாலுகா முகிழ்த்தகம் ஊராட்சி வெள்ளாளக்கோட்டை கிராமத்தில் ரோடு சேதமடைந்துள்ளது. 2 மாத்திற்கு ஒருமுறை காவிரி குடிநீர் வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். வெள்ளாளக்கோட்டை (ஏசுபுரம்) கிராம மகளிர் மன்றத்தினர், மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ஏசுபுரத்தில் இருந்து நம்புதாளை வரை 3 கி.மீ., ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்படுகிறோம்.ரோடு அமைத்து தர வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் பெயரளவில் வருகிறது, அதுவும் அசுத்தமாக வருகிறது. தினசரி சுத்தமான குடிநீர் வழங்க குழாய்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
28-Feb-2025