ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.1.47 கோடி உண்டியல் காணிக்கை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.47 கோடி வருவாய் கிடைத்தது.ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்கு பின் சுவாமி, அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகள் சன்னதிகள் முன்உள்ள உண்டியலை கோயில் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் கோயில் ஊழியர்கள் திறந்தனர். பின் காணிக்கைகளை சேகரித்து கோயில் திருக்கல்யாண மண்டபத்தில்எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ.1 கோடியே 47 லட்சத்து 42 ஆயிரத்து 943 ரூபாயும், தங்கம் 98 கிராம், வெள்ளி 4 கிலோ 100 கிராம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, பஞ்சமூர்த்தி, ராமநாதன் மற்றும் சிவனடியார்கள் பலர் ஈடுபட்டனர்.