ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.67 கோடி காணிக்கை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 1 கோடியே 67 லட்சத்து 12 ஆயிரத்து 892 ரூபாய் வருவாய் கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்கு பின்பு நேற்று கோயில் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்களை கோயில் ஊழியர்கள் திறந்து காணிக்கைகளை சேகரித்தனர். பின் காணிக்கைகள் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 12 ஆயிரத்து 892 ரூபாயும், தங்கம் 35 கிராம், வெள்ளி 4 கிலோ காணிக்கையாக கிடைத்தது. இதனை கோயில் உதவி ஆணையர் ரவீந்திரன், கோயில் ஆய்வாளர் சிவக்குமார், பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, கோயில் ஊழியர்கள் சிவனடியார்கள் குழுவினர் ஈடுபட்டனர்.