உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் பீடி இலை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் பீடி இலை பறிமுதல்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரை அருகில் 6 மூடைகளில் பீடி இலைகள் சிதறி கிடந்தன. மரைன் போலீசார் சிதறி கிடந்த பீடி இலைகளை சேகரித்தனர். 314 கிலோ பீடி இலைகள் இருந்தன. ராமேஸ்வரம் சுங்கத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தல்காரர்கள் கடத்திய போது இந்திய கடலோர காவல் ரோந்து கப்பலை கண்டதும் தனுஷ்கோடி கடலில் வீசிவிட்டு தப்பி சென்றிருக்கலாம், துாத்துக்குடி, மண்டபம், பாம்பனில் இருந்து கடத்தி வந்திருக்க கூடும், பீடி இலைகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ