உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட ரூ.52.50 லட்சம் கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட ரூ.52.50 லட்சம் கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டு இலங்கையில் படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.52.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். அந்நாட்டை சேர்ந்த 2 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை நெடுந்தீவு அருகே அந்நாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமளிப்பதாக இலங்கை பைபர் கிளாஸ் படகை பிடித்து சோதனையிட்டனர். அதில் 210 கிலோ கஞ்சா பார்சல்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை வீரர்கள் படகில் இருந்த அந்நாட்டு கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்தனர். பின் இலங்கை வீரர்கள் படகையும், கஞ்சா பார்சல்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இந்த கஞ்சா பார்சல்களை ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப்பகுதியில் இருந்து நாட்டுப்படகில் கடத்திச் சென்று இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களை தமிழக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ