இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டை பறிமுதல்: கைது 1
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டையை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். நேற்று மண்டபம் கடற்கரையில் மரைன் போலீசார் ரோந்து சென்ற போது டூவீலரில் பிளாஸ்டிக் கேனுடன் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் மண்டபம் தண்டல் தெருவை சேர்ந்த முகமது தாரிக் 23, என தெரிந்தது. அவர் வைத்திருந்த கேனில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 28 கிலோ கடல் அட்டைகள் இருந்தன.அதனை மறைவான இடத்தில் காயவைத்த பின் கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம். பறிமுதல் செய்த கடல் அட்டை, கடத்தல்காரர் முகமது தாரிக்கை மண்டபம் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.