/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கையை சேர்ந்தவர் கைது
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கையை சேர்ந்தவர் கைது
ராமநாதபுரம்:தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு 304 கிலோ கஞ்சா பொட்டலங்களை பைபர் படகுடன் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இலங்கையை சேர்ந்தவரை கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகின்றன. இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கின்றனர். கிளிநொச்சி அருகே உடுத்துறை கடற்கரையில் தமிழகத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டதாக வந்த தகவலையடுத்து தீவிர தேடுதல் நடந்தது. அங்கிருந்த பைபர் படகை சோதனை செய்ததில் 304 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதை படகுடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை முல்லியான் பகுதியை சேர்ந்த 41 வயதுள்ள ஒருவரை கைது செய்து மருதன்கேணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் இலங்கை மதிப்பு ரூ.3 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.