தனுஷ்கோடி மீனவர்கள் 4 பேருக்கு இலங்கை நீதிமன்றம் மன்னிப்பு
ராமேஸ்வரம்:தனுஷ்கோடி அருகே கடலில் இலங்கை கடற்படையினர் மீட்ட 4 மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் மன்னித்து விடுவித்தது.நேற்று முன்தினம் காலை தனுஷ்கோடியில் இருந்து நாட்டுப்படகில் மீனவர்கள் நம்பு பிரகாஷ் 23, நம்பு குளன் 25, நம்புபிரகாஷ் 24, சத்யராஜ் 25, ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் வீசிய சூறாவளியால் படகு மூழ்கியது. மீனவர்கள் மிதவை உதவியுடன் நீந்தி கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் 4 பேரையும் மீட்டு சென்றனர். நேற்று மீனவர்களை போலீசார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். படகு மூழ்கியதால் எல்லை தாண்ட வேண்டிய சூழல் ஏற்பட்டதால் 4 பேரையும் நீதிமன்றம் மன்னித்து விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்களை கொழும்பு மெரிக்கானா முகாமில் தங்க வைத்துள்ளனர். ஓரிரு நாட்களில் விமானம் மூலம் சென்னை வர உள்ளனர்.-