உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் கற்கள் பதிப்பு

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் கற்கள் பதிப்பு

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது.திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. மழைக் காலங்களில் மண்டபங்களில் தண்ணீர் கசிந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. கோயிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.கோயிலை புனரமைக்க அரசு ரூ.2 கோடி ஒதுக்கியது. சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்டமாக கோயிலின் மேற்பகுதியில் பழைய தட்டோடுகளை அகற்றி விட்டு புதிய தட்டோடுகள் அமைக்கும் பணி நடந்தது. அதனை தொடர்ந்து கோயில் வளாகத்தை சுற்றிலும் சிமென்ட் கற்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை