பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
கமுதி: பரமக்குடியில் இருந்து அபிராமம் செல்லும் தனியார் பஸ்சில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர்.கமுதி அருகே அபிராமம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் மேல்நிலை கல்விக்காக அபிராமம், கமுதி செல்கின்றனர். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் உரிய நேரத்திற்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வதற்காக இவ்வழியே வரும் பஸ்சில் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.நேற்று பரமக்குடியில் இருந்து அபிராமம் சென்ற தனியார் பஸ்சில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்தனர். இதனால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: அபிராமம் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மாணவர்கள் பள்ளி செல்வதற்கு வசதியாக அரசு பஸ் வசதி இல்லாததால் இவ்வழியே இயக்கப்படும் தனியார் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி இப்பகுதியில் காலை, மாலை நேரத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.