வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீங்க தூர்வார மனுகொடுத்தீர்கள் மனு வாங்கியவர்கள் உங்க கோரிக்கையை ஏற்று அரசு கஜானாவை பலமுறை தூர்வாரி அவர்களுடைய கஜானாவை நிரப்பியிருப்பார்கள். தகவலறியும் உரிமை சட்டத்தில் விசாரிக்க வேண்டும்
கமுதி : அரசை நம்பி இனி பயனில்லை என்ற முடிவால், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேர்ந்தகோட்டை கிராமத்திற்கு வரும் மழைநீர் வரத்து கால்வாயை, சொந்த செலவில் கிராம மக்களே துார்வாரினர்.சேர்ந்தகோட்டையில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாகும். நெல், மிளகாய் உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைவிக்கப்படுகிறது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பேரையூர் கண்மாயில் இருந்து வரத்து கால்வாய் வழியாக 5 கி.மீ., கடந்து வர வேண்டியுள்ளது.வரத்து கால்வாய் முறையாக பராமரிப்பின்றி பக்கவாட்டு சுவர்கள் இன்றியும், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தும் மணல்மேவி இருந்தது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் இன்றி விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மக்கள் விவசாயத்தை கைவிடும் நிலையுள்ளது.அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:சேர்ந்தகோட்டையில் வரத்து கால்வாய் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் விவசாயம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. துார்வார வேண்டி பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி, வரத்து கால்வாயை சொந்த செலவிலே துார்வார முடிவு செய்தனர். ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு துார்வாரும் பணியில் ஈடுபட்டனர். வரும் காலங்களில் விவசாயிகளின் நலன் கருதி அதிகாரிகள் முறையாக வரத்து கால்வாய்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபடுவோம்.இவ்வாறு கூறினர்.
நீங்க தூர்வார மனுகொடுத்தீர்கள் மனு வாங்கியவர்கள் உங்க கோரிக்கையை ஏற்று அரசு கஜானாவை பலமுறை தூர்வாரி அவர்களுடைய கஜானாவை நிரப்பியிருப்பார்கள். தகவலறியும் உரிமை சட்டத்தில் விசாரிக்க வேண்டும்