தேய்பிறை அஷ்டமி பூஜை
உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் மூலவர் சன்னதிக்கு முன்பாக ேஷத்திர கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. செவ்வரளி மாலை சூட்டப்பட்டு வடை மாலை சாற்றப்பட்டது. கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.வெண் பொங்கல், தயிர் சாதம், வடை உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.