உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திரவுபதி அம்மன் கோயிலில்திருக்கல்யாண விழா

திரவுபதி அம்மன் கோயிலில்திருக்கல்யாண விழா

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஜூலை 25-ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் தொடர்ச்சியாக சிலுகவயல் கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக திரவுபதி தருமர் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மகாபாரத வரலாற்று நிகழ்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. தொடர்ந்து திரவுபதி தர்மர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருமண கோலத்தில் முக்கிய வீதிகள் வழியாக திரவுபதி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ