உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மனைவியை சமரசம் செய்ய சென்ற போது மோதல்: மூவருக்கு கத்திக்குத்து

மனைவியை சமரசம் செய்ய சென்ற போது மோதல்: மூவருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் : பிரிந்து சென்ற மனைவியை சமரசம் செய்து அழைத்து செல்ல வந்த கணவர் மனைவியின் உறவினர்கள் 3 பேரை கத்தியால் குத்தினார். உச்சிப்புளி அருகே கோரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்குமார் 36. இவருக்கும் முத்துப்பேட்டை பிரியங்காவுக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். மோகன் குமார் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர்.இந்நிலையில் மலேசியாவில் இருந்து விடுமுறையில் சொந்த கிராமத்திற்கு வந்த மோகன்குமார் மனைவியை சமரசம் செய்து அழைத்து வர தனது தங்கை மகன் காளிதாஸ், சித்தப்பா மகன் வானீஸ்வரன் ஆகியோருடன் முத்துப்பேட்டை சென்றார். மனைவியின் பெரியப்பா முனியசாமி 50, வீட்டில் வைத்து சமரசம் பேசினர். இதில் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. மோகன்குமார், காளிதாஸ், வானீஸ்வரன் சேர்ந்து முனியசாமி, அவரது மகன்கள் அருள்ராஜ் 23, நர்மதன் என்ற கார்த்தி 25, ஆகியோரை கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த மூவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நர்மதன் புகாரில் திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர். மோகன்குமாரும் காயத்துடன் ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காளிதாஸ், வானீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !