உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புகையிலை பறிமுதல்: கைது 2

புகையிலை பறிமுதல்: கைது 2

கமுதி: கமுதி அருகே பேரையூர் பகுதியில் புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முதுகுளத்துார் டி.எஸ்.பி., சண்முகம் உத்தரவின் பேரில் பேரையூர் எஸ்.ஐ., செல்வராஜ் தலைமையில் போலீசார் கடைகளில் சோதனை செய்தனர். பேரையூர் நாடார் தெரு காமராஜ் 63, செல்லப்பாண்டி 45, ஆகியோரின் மளிகை கடையில் சோதனை செய்த போது 60 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து காமராஜ், செல்லப்பாண்டியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !