உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வரத்தால் தக்காளி விலை சரிவு

வரத்தால் தக்காளி விலை சரிவு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்திற்கு வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடந்த வாரத்தை விட ரூ.20 விலை குறைந்து கிலோ ரூ.40 வரை விற்கிறது. மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் குறைந்த அளவே சாகுடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான காய்கறி, பழங்கள் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து வியாபாரிகள் ராமநாதபுரம் அரண்மனை சந்தை பகுதியில் விற்கின்றனர். தற்போது தக்காளி வெளியூர்களில் இருந்து வரத்து உள்ளதால் விலை சரிவடைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.50 முதல் ரூ.60க்கு விற்றது தற்போது கிலோரூ.40க்கும், ஒன்றரைக் கிலோ ரூ.50க்கும் விற்கிறோம் என வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை