உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் திருட்டு: ஒருவர் கைது

டூவீலர் திருட்டு: ஒருவர் கைது

கமுதி: கமுதி அருகே அபிராமத்தில் திருச்சுழியை சேர்ந்த ரமேஷ்குமார் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்க்கிறார். சில நாட்களுக்கு முன்பு இவரது டூவீலர் திருடு போனது. அபிராமம் போலீசில் புகார் அளித்தார். கமுதி டி.எஸ்.பி., இளஞ்செழியன் உத்தரவில் தனிப்படை போலீசார் சி.சி.டி.வி., கேமரா உதவியோடு டூவீலர் திருட்டு குறித்து விசாரணை செய்தனர். இதில் திருச்சுழியைச் சேர்ந்த அழகுராஜா 36, கைது செய்யப்பட்டார். டூவீலரை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டுக்கு உதவியாக இருந்த இரண்டு பேரை கமுதி தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ