உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரம் பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் அபிஷேகம்

எமனேஸ்வரம் பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் அபிஷேகம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்ஸவர் பிரதிஷ்டை அபிஷேகம் நடந்தது. எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான பெருந்தேவி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.இங்கு புதிய வேதாந்த தேசிகர் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. ஜூன் 6 மாலை 6:00 மணிக்கு அனுக்ஞையுடன் விழா துவங்கியது. இரவு உற்ஸவர் கண் திறப்பு நடந்தது.நேற்று காலை 6:00 மணி முதல் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் மகாபூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து வேதாந்த தேசிகருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சபை நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை