ஊராட்சிகளில் அக்.2ல் கிராம சபை கூட்டம்
திருவாடானை,: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளிலும் அக்.2ல் காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது. திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் கூறியதாவது:அனைத்து ஊராட்சிகளிலும் அக்.2ல் காலை 11:00 மணிக்கு துவங்கி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் திட்ட பணிகள், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், துாய்மை பாரத இயக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.கிராம சபைக்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலிருந்து அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, கிராம வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் தெரிவிக்கலாம் என்றார்.