உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாரச்சந்தை வளாகத்தில் தேங்கிய தண்ணீரால் ரோட்டில்  வியாபாரம்

வாரச்சந்தை வளாகத்தில் தேங்கிய தண்ணீரால் ரோட்டில்  வியாபாரம்

பட்டணம்காத்தான்: ராமநாதபுரம் அருகே டி-பிளாக் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளதால் ரோட்டில் கடைகள் அமைக்கப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தை திடலில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை செயல்பட்டது. அங்கு பஸ்ஸ்டாண்ட் விரிவாக்க பணி நடப்பதால் தற்போது பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் அம்மா பூங்கா அருகே புதன்தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் நேற்று (புதன்) கடை அமைக்க இடமின்றி வியாபாரிகள் டி-பிளாக் ரோட்டில் வியாபாரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இனிவரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே வாரச்சந்தை கட்டணம் வசூல் செய்யும் ஊராட்சி நிர்வாகம், மழைநீரை அகற்ற முன்வர வேண்டும் என வியாபாரிகள், மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை