பரமக்குடி அ.தி.மு.க., நகர செயலாளருக்கு வரவேற்பு
பரமக்குடி: பரமக்குடி அ.தி.மு.க., நகர் செயலாளர் ஐ.வின்சென்ட் ராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வின்சென்ட் ராஜாவை பரமக்குடி நகர் செயலாளராக நியமித்துள்ளார். பரமக்குடி மணி நகர், ஓட்டப்பாலம், ஐந்து முனை மற்றும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினர் வரவேற்றனர்.மாவட்ட செயலாளர் முனியசாமி, மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். பரமக்குடி மேற்கு ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் காயாம்பு, ஒப்பந்ததாரர் சங்கீதா, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் துரைப்பாண்டி, நிர்வாகி சவுந்தரராஜன், மகேஷ், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ரமேஷ் கண்ணன், கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் போஸ், நகர் மாணவரணி செயலாளர் விஜய் பாபு, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணை செயலாளர் பாலா, இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் ராஜு, நகர் இளைஞரணி ஜாவா பாண்டியன் உடனிருந்தனர்.