பனை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரத்தைச் சேர்ந்தவர் பனைத் தொழிலாளி ராஜேந் திரன் 64. இவர் அப் பகுதியில் உள்ள பனை மரத்தில் வழக்கம் போல் கருப்பட்டி காய்ச்சுவதற்காக பதநீர் இறக்கி வருவது வழக்கம். நேற்று காலை 6:00 மணிக்கு 30 அடி உயரமுள்ள பனை மரத்தில் ஏறி உச்சியில் பதநீர் இறக்கி விட்டு இறங்கிய போது எதிர்பாராத விதமாக கை நழுவி ராஜேந்திரன் கீழே விழுந்து உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது குடும்பத்திற்கு அரசு உரிய நிதி உதவி வழங்க வேண்டு மென குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.